தங்கநிலா டாட்காம்
ஒடுக்கப்படுவோரின் உரிமைக்குரல்
28 09 2025
பெரியகுளம் முகம்மது
இதழாசிரியர்
#############
பார்க்கப்படும்
உலகநாடுகள்
கீழே படம்
(Google blogger states)
சிரிலங்கா
சிங்கப்பூர் மலேஷியா
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
அரபு நாடுகள்
ஐரோப்பிய நாடுகள்
சீனா ஜப்பான் தென்கொரியா
சுவீடன் நார்வே
(Google blogger states)

*பாலஸ்தீன தனி நாடு
அமைவது சாத்தியமா ?
Basithali Basith
------------------------------
நேற்று பிரான்ஸ் பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்துள்ளது.
நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 80 வது பொதுக்குழு கூட்டத்தில், பிரான்ஸ் அதிபர் மெக்ரான் திங்களன்று I declared that today the France recognise the State of Palestine என்று அறிவித்த போது அரங்கம் அதிர்ந்தது.
ஞாயிரன்று ஆஸ்திரேலிய பிரதமர், ஆண்டனி அல்பானஸ் தனது நாடு பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கூறியுள்ளார்.
இதே நாளில் இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வீடியோவில் மத்திய கிழக்கில் உருவாகியுள்ள நெருக்கடிகளை கணக்கில் எடுத்து தங்களது நாடு, பாலஸ்தீன தனி நாடு திட்டத்தை அங்கீகரிப்பதாக கூறியுள்ளார்.
இதே நாளில் இஸ்ரேல் காஸாவில் *கொடூர தாக்குதலை நடத்தி 55 பாலஸ்தீனர்களை படுகொலை* செய்துள்ளது.
வெகு தைரியமாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு Palestinian state "will not happen". பாலஸ்தீன் என்ற ஒரு நாடு இனி இல்லை என்று கூறியுள்ளார்.
அவர் சொன்னதற்கேற்ப பாலஸ்தீன் நாடு அமைந்துள்ள மேற்கு கரை கிழக்கு ஜெரூசலம் காஸா பகுதி மக்கள் *கொத்து கொத்தாக* *கொல்லப்பட்டும்,* அவர்களுடைய *வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டும்* வருகிறார்கள்.
இப்போதைய இஸ்ரேல் பாலஸ்தீன சண்டை காஸாவில் நடக்கிறது.
அங்கு கடந்த 2023 அக்டோபரிலிருந்து இதுவரை 68 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு சுமார் ஒரு லட்சத்து
70 பேர் காயமடைந்துள்ளனர்.
இது தவிர சண்டை நடக்காத பாலஸ்தீனின் மேற்கு கரை பகுதியில், ராணுவம் மற்றும் ஆக்ரமிப்பு குடியேற்ற வாசிகளால் *தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இஸ்ரேலிய ராணுவத்தாலும்,* ஆக்ரமிப்பு குடியேற்ற வாசிகளாலும் *கொல்லப்பட்டுள்ளனர்
.* பலர் தங்களது வீடுகளிலிருந்து *வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.*
இஸ்ரேலின் பயங்கரவாத செயல்கள் *எந்த தடையுமின்றி கொடூரமாக நடந்து வருகிற நிலையில்*
ஐரோப்பிய நாடுகளின் அங்கீகாரம் *என்ன விளைவை ஏற்படுத்தி விடப் போகிறது* என்ற விவாதம் சர்வதேச ஊடகங்களில் சூடாக நடைபெற்றுவருகிறது.
ஏனெனில் இப்போது பிரான்ஸ் பிரிட்டன் ஆஸ்திரேலியா கனடா போர்ச்சுகல் ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளனர்.
*அது ஒன்றும் புதித்தல்ல.*
1988 ஆம் ஆண்டில் யாசர் அரபாத் பாலஸ்தீனை ஒரு நாடாகவும், கிழக்கு ஜெரூசலத்தை அதன் தலைநகராகவும் அறிவித்த போது, அதை முதலில் *அல்ஜீரியா அங்கீகரித்தது.*
ஒரு வாரத்திற்குள் 80 க்கும் அதிகமான நாடுகள் பாலஸ்தீனை அங்கீகரித்தன.
அதை தொடர்து
2010 ல் இந்த எண்ணிக்கை 130 தாக உயர்ந்தது.
2011ல் பாலஸ்தீன் நாடு ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு உறுப்பினராக சேர முயற்சித்து, அப்போது அது தோல்வியடைந்தது.
எனினும் 2012 ஆம் ஆண்டில் பாலஸ்தீனிற்கு உறுப்பினர் நாடு அல்லாத பார்வையாளர் அந்தஸ்து பாலஸ்தீனிற்கு வழங்கப்பட்டது.
அப்போது *ஐநா சபை தலைமை அலுவலகத்தில் பாலஸ்தீன கொடி* ஏற்றப்பட்டது.
2023 ஆம் ஆண்டில் இஸ்ரேல் காஸாவின் மீது போர் தொடுத்த போது, பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஒரு புதிய அலை உருவானது.
அதன் பிறகு நார்வே, அயர்லாந்து மெக்ஸிகோ, ஸ்பெயின், ஆர்மீனியா, உள்ளிட்ட 10 நாடுகள் பாலஸ்தீன தனி நாட்டிற்கு ஆதரவு தெரிவித்தன.
கொஞ்சம் கொஞ்சமாக பாலஸ்தீனத்தை அங்கீகரித்த நாடுகளின் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்தது...
இத்தனை நாடுகளின் ஆதரவு இருந்தாலும் *அமெரிக்கா தொடர்ந்து பாதுகாப்பு சபையில் தனக்குள்ள வீட்டோ பவரை பயன்படுத்தி* பாலஸ்தீனுக்கு ஐநா சபையில் அங்கீகாரம் கிடைப்பதை தடுத்து வருகிறது.
*இஸ்ரேலின் அக்கிரமங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.* பல முக்கிய வல்லரசுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தன.
ஒரு நாடாக அங்கீகரிப்பதற்கு சர்வதேச சமுதாயம்
4 அளவுகோல்களை வைத்திருக்கிறது.
1. நிரந்தர குடிமக்கள்
2. சொந்த நிலம
3. அரசு
4. வெளிநாட்டு உறவு
இஸ்ரேலிய ஆக்ரமிப்பும், சட்ட விரோத குடியேற்ற நடவடிக்கைகளும், பாலஸ்தீன் என்ற நாடு உருவாவதற்கு தடையாக இருந்தன.
ஆனாலும் பாலஸ்தீன மக்கள் தங்களது நீண்ட தியாக, அர்ப்பணிப்பு போராட்டங்கள் மூலமாக பாலஸ்தீனத்திற்கான அங்கீகாரத்தை ஓரளவில் பெற்று வந்தனர்.
இத்தனை நாட்களாக நடை பெற்று வருகிற காஸா போரின் மூலமும் *காஸாவை காலி செய்ய இஸ்ரேலால் முடியவில்லை.*
இப்போது வலிமை வாய்ந்த ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்தன் மூலம், *காகிதத்தில் இருக்கிற பாலஸ்தீன் நாடு உடனடியாக நிஜ உலகிற்குள் குதித்து விடப் போவதில்லை* எனினும் இஸ்ரேலின் ஆதரவுக்கரம் சர்வதேச அளவில் குறைந்திருக்கிறது.
இந்த பட்டியலுக்குள் அமெரிக்கவை கொண்டு வர வேண்டியது (மனிதத்தன்மையுள்ள) மனிதர்கள் அனைவரின் பொறுப்பு.
இப்போது சர்வதேச சமுதாயத்திற்கும், இஸ்ரேல் அதன் ஆதரவு சக்தியான அமெரிக்காவிற்கும், எதிரான ஒரு போராட்டம் ஒரு வரலாற்று நெருக்கடியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
இதன் இலட்சியத்தீர்வு ஒன்றாக மட்டுமே இருக்க வேண்டும்.
*“சுதந்திர பாலஸ்தீனம்”*
அது 1920 களுக்கு பிந்திய ஒரு நூற்றாண்டு கால அநீதிக்கு முடிவு கட்டும் *இன்ஷா அல்லாஹ்.*
(நன்றி:-கோவை அப்துல் அஜீஸ் பாகவி)
குளோபஸ் சுமூத் புளோடில்லா
காசாவை நோக்கி கப்பலில் பயணம்
பகுத்தறிவு சுயமரியாதை
உலக நாடுகளே உற்று நோக்கும் குளோபஸ் சுமுத் புளோடில்லா வன்முறையற்ற நேரடி நடவடிக்கை
44 நாடுகளை சேர்ந்தவர்கள் மனிதாபிமான பொருட்களுடன் காஸா செல்லும் சர்வதேசிய மனித நேய
போராளிகள்
உயிரை பணயம் வைத்து பாலஸ்தீனியர்களுக்கு உதவ வேண்டும் என காஸாவை நோக்கி சென்று கொண்டு இருக்கும் 1000 கப்பலில் 30,000 க்கும் அதிகமான நபர்கள் காஸா நோக்கி பயணமாக செல்கின்றனர் .
உலக வராற்றில் மிக பெரிய கப்பல் பேரணி அணிவகுப்பு சர்வதேசிய பிரபலங்கள் அதில் குறிப்பா காலநிலை ஆர்வலர் கிரடா துன்பர்க் ,ஐரிஷ் லியான் நெல்சன் மண்டேலா பேரன் மற்றும் பிரான்ஸ் எம்பிக்கள் உலகப்புகழ் பெற்ற அரசியல் தலைவர்கள் மருத்துவர்கள் வழக்கறிஞர்கள் பெரும் பத்திரிக்கையாளர்கள் சமூக ஆர்வலர்களின் பெரும் படை Heading Towards to Gaza
மத்திய தரைக் கடல் வழியாக காஸா விர்க்கு இத்தாலியில் தொடங்கி பிரம்மாண்ட Free free palestine என்ற முழக்கத்துடன் பெரும் மக்கள் ஆதரவோடு புறப்பட தொடங்கி சர்வதேச பெருங்கடல் வழியாக காஸா செல்கிறது.
ஓடியனின் பகிர்விலிருந்து!
ஆங்கிலேயர்கள் மருது சகோதரர்கள் மீது போர் தொடுத்தனர்.
பல மாதப் போராட்டங்களுக்குப் பிறகு, 1801 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
அவர்களுடன் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நூற்றுக்கணக்கான விடுதலைப் போராளிகளும் தூக்கிலிடப்பட்டனர்.
வீரம்
செறிந்தமண்.
சிவகங்கைமண்
- பெரியகுளம் முகம்மது
எனது இளமைக்காலம்
திருப்பத்தூரில்தான் கழிந்தது.
அடிக்கடி மருதுபாண்டியர்
தூக்கிலிடப்பட்ட இடத்துக்கு பள்ளித் தோழர்களுடன் நான் செல்வதுண்டு.
மருது பாண்டியர் நாட்டுக்காகவும்
கடவுளுக்காகவும்
செய்தத் தியாகங்களை நான் ஏற்கனவே அறிந்திருந்ததால்
தூக்கிலிடப்பட்ட இடத்துக்குச் சென்றாலே உள்ளத்தில் ஒரு புத்துணர்வும்
உடலெல்லாம் வீர உணர்வும் ஏற்படும்.
ஆங்கிலேயர்களால்
திப்புசுல்த்தான்
கட்டபொம்மன்
மற்றும் மருது சகோதரர்களை நேரிடையாகப் போர்செய்து
வெற்றி கொள்ள இயலவில்லை.
மூவரையும் வஞ்சகத்தால்தான் வீழ்த்தினார்கள்.
மருது சகோதரர்கள்
சரணடைய வேண்டும்
இல்லையேல்
அங்குள்ள கோவிலை
இடித்து விடுவோம்
என்ற அறிவிப்பு வந்தபின்தான்
கோவிலை காக்க வேண்டும்
என்பதற்காகத்தான் சரணடைந்தார்கள்.
பசும்பொன் முத்துராமலிங்கத்
தேவரைப்போல்
தேசியத்தையும் ஆன்மீகத்தையும்
இரு கண்களாகக்
கொண்டிருந்தனர்
மருதுசகோதரர்கள்.
மருதுசகோதரர்கள்
மறைந்தாலும்
ஒவ்வொரு தமிழனின்
உள்ளத்திலும்
அவர்கள் நாட்டுப் பற்றாக,
வீர உணர்வாக வாழ்ந்து
கொண்டுதான் இருக்கிறார்கள்.
புரட்சியாளர்கள்....
புதைக்கபடுவதில்லை....
விதைக்கப் படுகிறார்கள்....
வேலுநாச்சியாரின் உயிர்த்தோழியாகவும், போர்ப்படையில் ஒரு முக்கிய
தளபதியாகவும் இருந்தவர் குயிலி. இவர் சிவகங்கைச் சீமையின் வரலாற்றில் ஒரு வீரமங்கையாகப் போற்றப்படுகிறார்.
1780-ல் ஆங்கிலேயருக்கு எதிராக நடந்த போரில், வேலுநாச்சியாரின் வெற்றிக்காகத் தன் உயிரையே தியாகம் செய்தவர் குயிலி. ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கில் நுழைந்து, தான் அணிந்திருந்த உடைகளுக்குத் தீ வைத்துக்கொண்டு, வெடிமருந்துகளைத் தகர்த்தார்.
இந்தச் செயல் சிவகங்கை கோட்டையை மீட்டெடுக்க உதவியது.
குயிலியின் இந்தத் தியாகம் இந்திய விடுதலைப் போரில் ஒரு முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.
“1884 ஆண்டு நம் நாட்டில் கடுமையான பஞ்சம்.
பட்டினி சாவு சுமார் 50 லட்சத்தை தாண்டியது. பசியால் எலும்பும் தோலுமாக மாறிவிட்ட குழந்தைகளுக்கு ஒருவேளை கூட சாப்பாடு இல்லாத நிலைமை..!!
அதனால், அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தவ அமைப்புகள் நமக்கு மருத்துவ சிகிச்சை, உணவு தருவதற்காக கப்பலில் இந்தியா வந்தன.
இவரது 14 வயது மகள் ஐடா ஸ்கடர்..!
ஒரு நாள் இரவு கதவு தட்டப்படுகிறது.
ஐடா கதவை திறக்கிறார். ஒரு ஆண் நின்று கொண்டிருந்தார்.
"அம்மா, என் மனைவி பிரசவ வலியால் துடிக்கிறாள்... உதவி வேணும் உடனே வாங்க" என்று பதறுகிறார்..!
ஐடாவோ,
"இல்லம்மா. என் மனைவிக்கு 14 வயசு தான் ஆகுது.
கொஞ்ச நேரத்தில் ஒரு இன்னொரு நபர் கதவை தட்டுகிறார்.
ஐடா தன் தந்தையை பற்றிக்கூற, "வேண்டாம்மா... எங்க வீட்டு பொண்ணை ஆண்கள் பார்க்கவே கூடாது" என்று அவரும் சோகத்துடனே திரும்பிவிடுகிறார்.
அந்த பெண்களுக்கு என்ன ஆச்சோ என்று இரவெல்லாம் பதட்டத்துடன் துடித்து பதறுகிறாள் ஐடா... மறுநாள் காலை அந்த கர்ப்பிணிகளின் சடலங்கள், தன் வீட்டை கடந்து கொண்டு செல்லப்படுவதை பார்த்து அதிர்ந்து போய், தேம்பி தேம்பி அழுகிறாள் ஐடா.
"என்ன தேசமிது? பெண்களை படிக்க வைக்க மாட்டாங்களாம், ஆனால் பெண்ணுக்கு பெண்தான் பிரசவம் பார்க்க வேண்டுமாம்?
இந்த நாட்டில் பெண்களை படிக்கவிடவில்லை என்றால் என்ன, நான் படித்துவிட்டு வந்து இந்த பெண்களை காப்பாற்றுவேன்"
என சபதமேற்று அமெரிக்கா சென்று படிக்கிறார்.
டாக்டராகிறார்..!
இதனிடையே, சக நண்பர் ஒருவர் ஐடாவை காதலிக்கிறார்.
ஆனால் ஐடா அந்த காதலை நிராகரிக்கிறார்.
மருத்துவம் படித்து முடித்ததுமே அமெரிக்காவிலேயே நல்ல வேலை வாய்ப்புகள் வந்தன.
ஆனால் ஐடா அதையும் நிராகரிக்கிறார். தமிழகத்தில் இறந்து போன அந்த கர்ப்பிணிகளின் சடலங்கள் மட்டுமே அவர் கண்முன் வந்து வந்து போயின..!!
ஆனால், வெறும் படிப்பை மட்டும் வைத்துக் கொண்டு எவ்வளவு பேரை தமிழ்நாட்டில் காப்பாற்ற முடியும் என்று நினைத்து, ஒரு ஆஸ்பத்திரி தேவை என்பதை உணர்கிறார்.
பல நாடுகளில் இந்தியாவின் அவலத்தை சொல்லி பிச்சை எடுக்காத குறையாக, நிதி உதவி கேட்கிறார். ஓரளவு நிதியும் சேர்கிறது...!
இனி ஒரு கர்ப்பிணியைகூட சாக விடமாட்டேன் என்ற உறுதியுடன் 1900-ம் ஆண்டு, ஜனவரி மாதம், தமிழகத்தில் மீண்டும் கால் பதிக்கிறார் ஐடா.
ஆஸ்பத்திரி கட்டும் பணியை ஆரம்பிக்கிறார்.
பெண்ணுரிமை என்ற பேச்சுக்கே இடமில்லாத நேரத்தில், பெண்களுக்காகவே ஒரு மருத்துவமனையையே கட்டி முடித்தார் இளம்பெண் ஐடா!
//அதுதான் ஆசியாவிலேயே தனிப்பெருமை வாய்ந்து. நூற்றாண்டையும் கடந்து இன்றும் பிரம்மாண்டமாய் நிற்கும் வேலூர் "சிஎம்சி" ஆஸ்பத்திரி!//
ஐடாவின் பணி இத்துடன் முடியவில்லை.
இவர்கள் தான் நம் தமிழகத்தின் முதல் 5 நர்ஸ்கள்..!
நம்முடைய பெண்கள் மருத்துவம் படிக்க விதை போட்டதே, இந்த ஐடா தான் என்பதை எத்தனை பேர் நன்றியுடன் இன்று நினைத்து பார்க்கிறார்களோ தெரியவில்லை..!
ஆனால், யார் இந்த பெண்? இவர் ஏன் நமக்காக அழுதார்? இவர் ஏன் நமக்காக உருகினார்?
எங்கேயோ பிறந்து, எங்கேயோ வளர்ந்து, நம் தமிழ்நாட்டுக்காக, தன் வாழ்க்கையையே மொத்தமாக அர்ப்பணித்த ஐடா, அன்னை தெரசாவுக்கே "வழிகாட்டி" என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?!!
ஆனால், ஒரு பெண் தனி ஆளாக நின்று ஏற்றிய மெழுகுவர்த்தி, இன்று பிரகாசமாக, உலகத் தரத்தோடு, வேலூரில் இன்னமும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மக்களுக்கு உயிர் தந்து கொண்டுமிருக்கிறது..!
இந்த உண்மை சிலப் பேருக்கு எரிச்சலாக தான் இருக்கும் கடந்து செல்லவும் இல்லையே வழக்கமாக கதறிச் அசிங்கமாக
சென்னை மீலாது விழா 21 09 2025
மாண்புமிகு
முதலமைச்சர்
Rsvedio Darvis
சென்னை மீலாதுவிழா
சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நபிகள் நாயகம் அவர்களின் 1500-வது பிறந்தநாள் விழாவில் மாண்புமிகு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது.
AsaUmarfarook
கண்கள் குளிர்ந்தன,
உள்ளம் மகிழ்ந்தன,
தொடக்கம்
தொடரட்டும்...
உரிய அங்கீகாரத்துடன்...
-அச.உமர் பாரூக்
Azees Luthfullah
அட்டகாசமான, ஆர்ப்பாட்டமான, அர்த்தம் நிறைந்த, அழகான உரை...!
அகிலத்துக்கோர் அருட்கொடையாக வந்த நபிகளாரைக் குறித்து சிறப்பான அறிமுகம்!
ஐந்தே நிமிடங்களில் இரத்தினச் சுருக்கமாக, உணர்வுப் பிழம்பாகப் பேசி இதயங்களைத் தொட்டுவிட்டார்! நிமிடத்துக்கு நிமிடம் கரவொலி!
இந்தக் காலத்தில் உலகம் எவற்றையெல்லாம் முற்போக்கான கருத்துகளாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றதோ அவையனைத்தையும் 1500 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது மட்டுமல்லாமல் சொன்னதை நடைமுறைப்படுத்தியவர்கள்தாம் நபிகளார்(ஸல்) என்பதை தமீம் அன்சாரி நிறுவிய விதம் அழகு.
உழுபவருக்கே நிலம் சொந்தம் என்று இன்று சொல்கின்றோம். ஆனால் 1500 ஆண்டுகளுக்கு முன்பே விவசாயிகளின் அந்த உரிமையை நிறுவியவர்தாம் நபிகளார்(ஸல்) என்று ஓங்கி முழங்கியதென்ன!
கம்யூனிசத் தோழர்கள் தங்களுக்கிடையிலான சகோதர வாஞ்சையை வெளிப்படுத்துகின்ற விதத்தில் ஒருவருக்கொருவர் தோழர் என்று அழைத்துக் கொள்கின்றார்கள்.
ஆனால் 1500 ஆண்டுகளுக்கு முன்பே தம்மைப் பின்பற்றி நடப்பவர்களை சீடர்கள் என்று சொல்லாமல் தோழர்கள் என்று சொல்லி அரவணைத்துக் கொண்டவர்கள்தாம் நபிகளார்(ஸல்) என்று பாங்காகச் சொன்னதென்ன!
உழைப்பாளியின் வியர்வை உலருமுன் அவனுக்குரிய ஊதியத்தைக் கொடுத்துவிடுங்கள் என்று உழைப்பாளிக்காக உரிமைக் குரல் கொடுத்தவர்கள்தாம் நபிகளார்(ஸல்) என்கிற யதார்த்தத்தை விவரித்ததென்ன!
இன்று சமூக நீதி குறித்து எல்லோரும் பேசுகின்றார்கள்.
திராவிட மாடல் அரசின் அடையாளமாக சமூக நீதி இருக்கின்றது. 1500 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலாக பள்ளிவாசல் கட்டப்பட்ட போது,
தொழுகைக்காக மக்களை அழைக்கின்ற மகத்தான பொறுப்பு யார் வசம் ஒப்படைப்பது என்கிற தருணம் வந்த போது, நபிகளாரின் உறவினர்களும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தவர்களும் அந்தப் பொறுப்பை எதிர்பார்த்திருந்த போது,
ஆப்ரிக்க அடிமையாக இருந்த பிலால்(ரலி) அவர்களுக்கு அந்தப் பொறுப்பைத் தந்து கோத்திரச் செருக்கு, குலச் செருக்கு ஆகிய அனைத்தையும் உடைத்தெறிந்து சமூக நீதியை நிலைநாட்டியவர்கள்தாம் நபிகளார்(ஸல்) என்று உரத்துச் சொன்னதென்ன!
பெண்களுக்குச் சொத்துரிமை உண்டு என்று இப்போதுதான் பேசப்படுகின்றது.
அதிலும் இந்தியாவில் அதைக் குறித்து பேசியவர் டாக்டர் கலைஞர் ஒருவர்தான்.
ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தந்தையின் சொத்தில் பெண்ணுக்கும் உரிமை உண்டு என்று நிலைநாட்டியவர்கள்தாம் நபிகளார்(ஸல்) என்று அழகாகச் சுட்டிக்காட்டியதென்ன!
கற்றலின் சிறப்பை, அநாதைகளை ஆதரிப்பதன் அவசியத்தை அன்றே அதிகமாக அறிவுறுத்தியதும் நடைமுறைப்படுத்தியதும் அன்பு நபிகளார்(ஸல்)தாம் என்று அழகாக அடுக்கிக் கொண்டே போனதென்ன!
முத்தாய்ப்பாக காஸா பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த முதல்வரை வெகுவாகப் புகழ்ந்து, அன்புத் தம்பிகள் நாங்கள். திராவிட மாடல் அரசை பாதுகாக்கும் இரும்பு கம்பிகள் நாங்கள் என்று முடித்தது செம பஞ்ச்.
எதிர்பார்த்தது
-------------------------
Hyder AliGhaas
ஆப்கானிஸ்தானில் உள்ள Bagram Airbase பேக்ராம் விமானப்படைத்தளத்தை அமெரிக்காவிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று உலக கட்டப்பஞ்சாயத்து தலைவர் கேட்டுக் கொண்ட போது ஆப்கான், கத்தாரை போல மெளனம் சாதிக்காது என்பது எதிர்பார்த்த ஒன்று தான்.
“எங்களுடைய நாட்டில் ஒரு அடி நிலத்தை கூட அமெரிக்காவுக்கு தர முடியாது. அதற்காக இன்னும் இருபது ஆண்டுகள் கூட நாங்கள் போரிட தயாராக இருக்கிறோம் என்று ஆப்கான் தெரிவித்து விட்டது.
*இது கொண்டாடப்பட வேண்டிய செய்தி.*
உலகை தனது முரட்டுத்தனத்தால் அச்சுறுத்திக் கொண்டிருக்கிற ஒரு பயங்கரவாதச் சக்திக்கு *கொஞ்சமும் அலட்டலில்லாமல்* ஆப்கான் பதிலடி கொடுத்திருப்பது உன்னதமானது.
பேக்ராம் விமானப்படை தளத்தை கட்டிய *ரஷ்யா கூட அமெரிக்க அதிபரின் கூற்றுக்கு பதில் விளைவாற்றவில்லை.* சீனாவும் வாளாவிருக்கிறது எனும் போது ஆப்கானின் தனித்த பதிலடி தகை சார்ந்தது.
ஆப்கானிய மக்கள் வெறும் *வாச்சொல் வீர்ர்கள் அல்ல* என்பதற்கு கடந்த கால வரலாறு சாட்சி.
பாலஸ்தீனத்தை மேற்குலக நாடுகள் அங்கீகரிப்பது குறித்து அதிருப்தி வெளியிட்ட அமெரிக்க அதிபர், அவர்களிடம் தனது திட்டங்கள் பலிக்கவில்லை என்பதை உணர்ந்து கொண்டார்.
சமீபத்தில் அவர் இங்கிலாந்து பயணம் சென்று வந்த நிலையிலும் *இங்கிலாந்து அரசு பாலஸ்தீனத்தை அங்கீகரித்துவிட்டது.*
எதிர்பார்த்தது போலவே அமெரிக்க அதிபர் அரபு நாடுகளின் அரசு தலைவர்களின் கூட்டத்தை வாஷிங்க்டனில் கூட்டியுள்ளார்.
அதன் அஜண்டாவை கவனித்து பாருங்கள்!
போருக்கு பிந்திய காஸாவில் ராணுவ மேற்பார்வை, மற்றும் அரபுகளின் நிதிப் பாதுகாப்பு குறித்து பேச இருப்பதாக அமெரிக்க வட்டாரங்கள் கூறுகின்றன.
அடி மடியில் கை வைத்தாயிற்றா ?
உன்னுடைய பணத்தை பத்திரப்படுத்தறது பற்றி பேசு! *பாலஸ்தீன் தனி நாடு என்றெல்லாம் யோசிக்காதே என்று எவ்வளவு நேக்காக கூறிவிட்டார்கள்.*
இதை மீறி அரபு நாடுகள் என்ன செய்யும்?
இந்த நிலையில் ஆப்கானின் சூளுரை உலகில் ஆங்காங்கே *அரிதாக காணக்கிடைக்கின்ற வஞ்சகமற்ற அரசியலுக்கான* வலுவான சான்றாக இருக்கிறது.
*“ஒரு நூறு ஆண்டுகள் நரிகளைப் போல வாழ்வதை விட, ஒரு நாள் சிங்கத்தைப் போல வாழ்வதே சிறந்தது”* என்றார் திப்பு.
சுல்தான் என்ற பெயருக்கு என்ன பொருத்தம் பாருங்கள்!
8 வருடங்கள் GST அடித்தது 55 லட்சம் கோடி ஆனால் தருவதாக ( சேமிக்க முடியும் என்று)இப்போது சொல்வது 2.5 லட்சம்.
❤️ ❤️ ❤️ ❤️ ❤️
Dhanasekaran Annamalai
படித்ததில் பிடித்தது
🌄கலைஞர் ஒருதடவை ஜெய் ஸ்ரீராம் சொல்லியிருந்தால்...,,
⛩️குடியரசு தலைவர் ஆகியிருப்பார்..
🏅பாரத ரத்னா வாங்கியிருப்பார்...
🏛️தொடர்ந்து 25 ஆண்டுகள் ஆட்சியில் தொடர்ந்திருப்பார்...!
🎯அவரோடு முடிந்திருக்கும் அந்த வரலாறு...!
◾ஆனால் அவரோ, அம்பாள் எப்போது பேசினாள் எனக் கேட்டார்..!
◾விளைவு...?
🇮🇳வரலாற்றில் நிகரற்றவன் என்கிற பதிவை போட்டுவிட்டு சென்றிருக்கிறார்...!
🏖️கலைஞர் ஓய்வெடுக்கிற வரை மெரினா கல்லறைகளை எவனும் கண்டு கொண்டதே இல்லை...!
✍️அந்த அதிர்ச்சியில் இருந்து மீளுமுன்பு பேனா சிலை பரபரப்பு...!
🚩கையறு நிலையில் உள்ளுக்குள் துடிக்கிறது பார்ப்பனியம்.
🎤தனது எச்சில் பிள்ளைகளை காசு கொடுத்து பேசவைத்து கொஞ்சம் சுய ஆறுதலடைகிறது...!
💢ஒரு மனிதனின் உயிரற்ற உடல் கண்டு ஒன்றிய அரசே நடுங்கி பதறியது கலைஞரை பார்த்துதான்..!
🌇ஒரு மனிதனின் சிலையோடு கூட போராடி வெல்ல முடியாமல் ஒரு பெருங்கூட்ட அதிகார வர்க்கம், அலறி துடிப்பது பெரியாரை கண்டுதான்...!
🏔️இந்த நூற்றாண்டின் இணையற்ற இரு இமையங்கள் பெரியாரும் கலைஞரும் தான்...!
🇮🇪காமராஜர், கக்கன் எனவும் படிக்க வருவார்கள்... வரலாறு அறியாத வாய்மொழி கேட்டவர்கள்...!
🟢நேர்மையானவர்கள் ஆயிரம் உண்டு...!
🟣நேர்படுத்தியவர்கள் ஒரு சிலரே... அவர்களையே வரலாறு தலைவர்கள் என்று கூறும்...!🌏
Palsamaya Natpuravu Khazhgam
Sameera Mohamed
#CAA க்கு ஆதரவு, NRC க்கு ஆதரவு, NPR க்கு ஆதரவு, முத்தலாக் சட்டத்திற்கு ஆதரவு, காஷ்மீர் 340 சட்டம் சிறப்பு அந்தஸ்து நீக்க ஆதரவு என முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து சட்டங்களுக்கும் பிஜேபிக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு இப்போது நாகூர் தர்காவில் ஓட்டு பிச்சை எடுக்க வந்துருக்காப்ள...😜
Human kekirva
தனது குடும்பம் முழுவதும் படுகொலை செய்யப்பட்ட நிலையில் உயிர் தப்பிப்பிளைத்த
காசாவின் பிஞ்சொன்று, இடம் பெயர்வின் போது சோர்வடைந்து மணலில் தூங்குகிறது.
#தல்ஹா_மதர் எனும் அல்ஹஜெசீராவின் ஊடகவியலாளர் இதனை புகைப்படம் எடுத்துள்ளார்.
இந்தியாவின் எடிசன்
Mikky Mezzo
Udhayanithi Stalin
ஜி.டி.நாயுடு அவர்களுடைய வழக்கு ஒன்று உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் இருந்தது..
அதை ஒரு வழக்கறிஞராக நின்று முடித்துக் கொடுத்தவர் பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள்..
அதற்கு கைமாறாக ஒரு பெரிய பெட்டி நிறையா பணத்தை கொண்டு போய் பாபாசாகேப்புக்கு கொடுத்திருக்கிறார் ஜி.டி.நாயுடு..
பாபாசாகேப் சொன்னாராம் “இந்தப் பணம் எனக்கு வேண்டாம்; அதற்கு பதிலாக நான் எப்போதும் தமிழ்நாட்டிற்கு வந்தாலும் என் பயணச்செலவையும்; அங்கே நான் தங்குவதற்கான செலவையும் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்" என்றிருக்கிறார்..
ஜி.டி.நாயுடு-வும் மகிழ்ச்சியோடு சம்மதித்திருக்கிறார்..
பாபாசாகேப் டெல்லியிலிருந்து வருவதாக இருந்தால் தமிழகத்தில் ஐந்து நட்சத்திர விடுதியில் தான் ரூம் புக் பண்ணுவாராம் ஜி.டி.நாயுடு..
'பாபாசாகேப் என் விருந்தாளி, அத்தோடு அவரை வரவேற்று விருந்து உபசரிப்பதில் நாம் பெருமை கொள்கிறேன். அவரை நான் சிறப்பாக கவனிக்க வேண்டும்' என்று அருகே இருந்தே பார்த்துக்கொள்வாராம்
ஒரு முறை நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்தவரை ஹிந்து பத்திரிக்கை ரிப்போர்ட்டர் பேட்டி எடுக்க வந்திருக்கிறார்..
பேட்டி எடுக்கும் முன்னரே கேட்டிருக்கிறார்..
“டாக்டர் அம்பேத்கர், காந்திஜி அவர்கள் மிகவும் ஏழ்மையாக வாழ்கிறார், கதர் ஆடை உடுத்துகிறார், மேல் ஆடையே உடுத்துவதில்லை. ஆனால் நீங்களோ ஏன் இவ்ளோ ஆடம்பரமான இடத்தில் தங்கியிருக்கிறீர்கள்; அத்தோடு எப்போதுமே கோட் சூட் போட்டு வெள்ளைக்காரன் போலவே வலம் வருகிறீர்களே ஏன்?"
பாபாசாகேப் சிரித்துக் கொண்டே பதிலளித்தாராம்..
"காந்தி அவர்கள் பல்வேறு வகையில் உளவியலாக பாதிக்கப்பட்ட எம் மக்களை மேலும் உளவியலாக தாக்குகிறார், காந்தியே சட்டை இல்லாமல் இருக்கிறார், நாம சட்டை போடாவிட்டால் என்ன என்று ஏற்கனவே சட்டை போடாத எம் மக்கள் அதைப் பற்றி யோசிக்கவே மாட்டார்கள்; அப்புறம் எப்படி அவர்கள் அதிலிருந்து விடுதலை பெறுவார்கள்..
நான் கோட் சூட் போடுகிறேன், விலையுயர்ந்த ’டை’ மட்டும் ’சூ’ போடுகிறேன்.
மிகவும் ஆடம்பரமான இடத்திலிருந்து கொண்டு எம்மக்களை இங்கே வரச்சொல்லி சந்திக்கிறேன்; என்னை இந்த இடத்தில் பார்க்க வருகிறவன், நல்ல உடை உடுத்த முயல்வான், அதற்காக சம்பாதிக்க உளவியலாக அவனின் மனம் தயாராகும்; உழைப்பான்; சட்டையே போடாமல் திரிந்தவன் புத்தாடை உடுத்துவான் என்றிருக்கிறார்.
வெற்று உடம்பிலிருந்து நல்ல உடைக்கு மாறுவான்…"
வாயடைத்துப் போய் நின்றிருக்கிறார் அந்த ஹிந்து பத்திரிக்கை ரிப்போர்ட்டர்..
படம்: கோவை ஜிடி நாயுடு இல்லத்தில் அண்ணல்..
Mathimaran VMathi
இருமொழிக் கொள்கையில் படித்த அரசுப்பள்ளி மாணவி ஜப்பான் மொழியில் அசத்தினார்😍
இந்தித் திணிப்பு எதிர்ப்பின் சிறப்பு.
தேவையெனில் எத்தனை மொழிகளையும் படிப்போம்.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு💞
Tamilan
Aluteen Aluteen
Himalayan Farming
Islamic Research Info
இங்கிலாந்து பாலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக அதிகாரபூர்வமாக சற்றுமுன் அறிவிப்பு ஆணையை வெளியிட்டது,
அதை அங்கீகரித்த பின் சட்ட ரீதியாக அதன் அடுத்த அறிவிப்பாக பிரிட்டிஷ் அதிகாரி:
"இஸ்ரேல்" அனைத்து மேற்குக் கரை குடியேற்றங்களிலிருந்தும் விலக வேண்டும், ஏனெனில் அவை பாலஸ்தீன அரசின் பிரதேசங்கள், மேலும் இது சர்வதேச சட்டத்தின்படி குடியேற்றங்களைத் தடுக்கிறது.
என்று சட்ட ரீதியாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Iniya Islam
Muduvai Abuthalif
Muduvai Abutalib
தனது சக அரசியல்வாதிகள், பாராளுமன்ற உறுப்பினர்களின் கைதட்டல்களுக்கு மத்தியில் ஸ்பெயின் பாராளுமன்றத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றது.
தொழிலாளர் சமூகக் கட்சியின் (PSOE) ஸ்பானிஷ் எம்.பி. மார் எஸ்பினார் பாலஸ்தீனக் கொடியை உயர்த்திப் பிடிக்கும் போது, மாட்ரிட் பிராந்தியத் தலைவர் இசபெல் டயஸ் அயோசோ அதனை எதிர்த்தார்.
அவர் முன்னதாக பாலஸ்தீனக் கொடி காட்டப்பட்டதை தாக்கிப் பேசி அதை 'அரசியல் பிரச்சாரம்' என்று கத்தினார்.
எனினும் பாலஸ்தீனக் கொடியை கீழே போடாது, அவருக்கு தக்க பதிலடி கொடுத்தார் மார் எஸ்பினார்.
அவர் கூறினார்.
இந்தக் கொடியின் நிறங்கள் எதைக் குறிக்கின்றன தெரியுமா?" கருப்பு பாலஸ்தீன மக்கள் வாழ்ந்த நாடுகடத்தலைக் குறிக்கிறது, வெள்ளை அமைதியைக் குறிக்கிறது, பச்சை வளமான நிலத்தில் தாராளமான வாழ்க்கையின் நம்பிக்கையைக் குறிக்கிறது, சிவப்பு தங்கள் உயிர்களை இழந்த லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்களின் இரத்தத்தைக் குறிக்கிறது. "
"இது ஒடுக்கப்பட்ட மக்களின் அமைதி மற்றும் கண்ணியத்தின் அறிவியல், மற்றும் வளமான நிலத்தில் நம்பிக்கை. "
பாலஸ்தீனக் கொள்கையை ஓரங்கட்ட முயற்சிகளை எதிர்கொள்வதில் ஒரு துணிச்சலான மனிதாபிமான செய்தியாக இருந்ததால், நாடாளுமன்ற உறுப்பினரின் தலையீடு ஸ்பெயினிலும், வெளிநாட்டிலும் பரவலாக எதிரொலித்தது.
இந்தக் கொடி வெறும் அரசியல் சின்னம் மட்டுமல்ல, நீதி மற்றும் கண்ணியத்தைத் தேடும் மக்களின் துன்பங்கள் மற்றும் கனவுகளுக்கு ஒரு கண்ணாடி என்பதை இது உறுதிப்படுத்துகிறது.
www.jaffnamuslim.com
அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன்.. 🤲✌️
Rajabullakhan
Vivicrazy Motivation
PalsamayaNatpuravukslsgam
திருச்சி அன்பு
DW தமிழ்
Nellai Tuti
Tamilan
Mohamed Abudhar Mohaidin
#டெல்_அவிவ் மீது இலக்காகக் கொண்ட தனது இராணுவக் கட்டமைப்பை நிறுத்திய எகிப்தின் மீது அழுத்தம்
கொடுக்க இஸ்ரேல் அமெரிக்காவைக் கோரியுள்ளது.
எகிப்து சமீபத்தில் சீனாவில் தயாரிக்கப்பட்ட HQ-9B வான் பாதுகாப்பு
அமைப்பை சினாயில் நிலைநிறுத்தியது.
Mohamed Ismail
இறைவன் ஏன் வெளவால்களை படைத்தான்,என்று,பலமுறை,யோசித்ததுண்டு. இரவில் அமைதியாகப் பறக்கும் இந்த அற்புத உயிரினம் சிலபோது ஆச்சரியத்தையும் இன்னும் சிலபோது பயத்தையும் ஒருசேரத் தருகிறது.
ஆனால் இந்த உயிரினத்திற்குப் பின்னால் இருக்கும் நுட்பத்தை இன்றைய விஞ்ஞான உலகம் வெளிப்படுத்துகிறது.
இவை ஒவ்வோர் இரவும் ஆயிரக்கணக்கான,தீங்கு,விளைவிக்கும்,பூச்சிகளைவிழுங்கி,சுற்றுச்சூழலை சமநிலையில் பராமரிக்கின்றன.
தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு,விதைகளைப்பரப்புவதுடன்,காடுகளில்,உயிர்கள்,பரவுவதற்கும் பெரும் பங்காற்றுகின்றன.
இரவில் பறப்பதற்கு இவை கண்களைப் பயன்படுத்துவதில்லை மாறாக,ஒலிகளைப்
Emily Devis
Parimala Rajan
யார் இந்த எச் வி.ஹண்டே ?
இவருக்கு திராவிட மாடல் முதல்வர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்து
ஆனால் இவர்
சட்டசபையில் கலைஞரைப் பார்த்து கேட்ட கேள்வியும் கலைஞர் அதற்கு சொன்ன பதிலும் சட்டமன்ற வரலாற்றில் இடம் பெற்றது.
இந்த எச்.வி.ஹண்டே சட்டமன்றத்தில் முதல்வர் கலைஞரை நோக்கி,
"இந்த அரசு மூன்றாம் தரமான அரசு" என்றார்.
அதுகேட்டு அவரது கட்சியினர் ஆரவாரம் செய்தனர். ஆளுங்கட்சியினர் எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.
மிக மட்டமான அரசு (Third Rate) என்ற பொருளில் அவர் கூறியதே அதற்குக் காரணம்.
கலைஞர் எழுந்தார். அவை சற்று அமைதியாயிற்று. அவர் சொன்னார்:
"உறுப்பினர் சரியாகச் சொல்லவில்லை; இது மூன்றாம் தர அரசல்ல.
இது நான்காம் தரத்தினர் ஆள்கிற அரசு.
அதனால்தான் நான்காம் தரத்தினருக்கான மேம்பாட்டில் அதிக அக்கறை காட்டுகிறது"
பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்கு வருணத்தினரில் கடைப்பட்டவரது ஆட்சி இது"
என்றார்.
பார்ப்பனர்களுக்கும் வாழ்வளிக்கும் திராவிடம்.
ஹண்டே பார்ப்பனச் சமூகத்தைச் சேர்ந்தவர்.
Basha
நிஷா சென்னை
Peer Mohamed
2026 சட்டப்பேரவைத் தேர்தலில்
இந்த முறை தமிமுன் அன்சாரிக்கு வாய்ப்பளிக்க வேண்டும்
ஏகோபித்த மக்களின் விருப்பம்....
Fathima Mohaideen
Android Superstars
25Tamil
🔥💨😅
“வாயு வெளியேறுவது = குடல் ஆரோக்கிய சிக்னல்!” ✨
பலர் இதை வெட்கப்பட வேண்டிய விஷயம் என்று நினைப்பார்கள் 🤭.
ஆனால் உண்மையில் 👉 இது உங்கள் குடல் நன்றாக வேலை செய்கிறது என்பதற்கான ரகசிய சிக்னல்! 🌿
🤔 ஏன் Gas உருவாகிறது?
🥦 குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் உணவைக் குடைக்கும் போது இயற்கையாகவே வாயு உண்டாகிறது.
✅ குடல் செயல்பாடு சீராக உள்ளது
✅ செரிமானம் நன்றாக நடக்கிறது
✅ Gut Microbiome ஆரோக்கியமாக இருக்கிறது
💨 Fart = Gut Health Signal
👉 ஆய்வுகள் படி வாயுவில் இருக்கும் Hydrogen Sulfide உடலின் சில செல்களை பாதுகாக்கும் சக்தி கொண்டிருக்கலாம்.
😅 ஆனால் அதிகமாகவோ, துர்நாற்றமோ இருந்தால் – அது பிரச்சனை!
🚨 எப்போது கவலைப்பட வேண்டும்?
❌ அடிக்கடி கடுமையான துர்நாற்றம்
❌ வயிற்று வலி + bloating
❌ வயிற்றுப்போக்கு / Constipation
👉 இவை இருந்தால் மருத்துவரை கண்டிப்பாக பார்க்கவும்.
🌿 Gas Control & Healthy Gut Tips
💧 நிறைய தண்ணீர் குடிக்கவும்
🥗 நார்ச்சத்து (fiber) அதிகம் உள்ள உணவுகள் சாப்பிடவும்
🚶 தினமும் 20–30 நிமிடம் நடைபயிற்சி
🧘 ஸ்ட்ரெஸ் குறைய மனஅமைதி பயிற்சிகள்
🍔 ஜங்க் & Processed foods குறைக்கவும்
✨ Final Note
💨 வாயு வெளியேறுவது வெட்கம் இல்லை – உடல் வேலை செய்கிறது என்பதற்கான சின்னம்!
😅 ஆனால் அதிகமாக இருந்தால் → உங்கள் குடல் “Help Me!” என்று சொல்லும் signal.
Mysore Palace ✨
📍 Karnataka
📷 | Divya Visuals
Naseer Nas
#goodevening
ഇന്നത്തെ Evening ഫുട്ബോൾ തുടങ്ങാൻ നേരമായി 👌
#eveningfootball #malappuram
Our Thirunelveli
நகரத்து வாழ்க்கையில் தொலைந்துபோன ஆனந்தங்களில் ஒன்று #ஆற்றங்கரை அனுபவம். வெயிலுக்கு இதமாக ஆற்றில் குளிப்பது, துணி துவைப்பது, நண்பர்களுடன் சிரித்துப் பேசுவது என ஒவ்வொரு ஆற்றங்கரையும் ஒரு தனி உலகம். மனதிற்கு நிம்மதியையும், உடலுக்கு புத்துணர்ச்சியையும் தரும் ஆற்றங்கரையின் அருமையை நவீன உலகம் அறியாது. 🌳💧
K Selvaperunthagai
நேற்று (23.09.2025) காங்கிரஸ் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்க பாட்னா சென்ற என்னையும் துணைத்தலைவர் திரு.சொர்ணா சேதுராமன் அவர்களையும் பீகார் மாநில காங்கிரஸ் வரவேற்றார்கள்.
Indian National Congress
- BIHAR Indian National Congress #CWC_Bihar
FarithaKoya
Kuttifaritha
Dhanasekaran Annamalai
Uthuman Ali
இந்த ஒற்றுமை மனிதனுக்கு இல்லையே
Tamil Janam
ஒரு யூத மத குருவான #ரபி கூறுகையில் நாங்களும் இஸ்லாமியர்களும் உறவினர்கள் இங்கு பிரச்சனை என்னவென்றால் இஸ்லாமியர்களின் நிலங்களை யூதர்கள் அபகரிப்பது தான் பிரச்னை.
அவர்களின் வழிபாட்டு தளத்தை மஸ்ஜித் அல் அக்ஸா வை ஆக்கிரமிப்பது கூடாது அது அவர்கள் தொழும் இடம் எனவே இஸ்ரேலிய அரசு ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்களை இஸ்லாமியர்களிடமே ஒப்படைத்து விட்டால் பிரச்னை தீர்ந்து விடும் என்று கூறுகிறார்.
Mv Rajini
Sirithu Mahihzvom
நம் தமிழ்நாடு
Tamilco
கடையநல்லூர் நண்பர்கள்
எவரெஸ்ட் சிகரம் கடல் மட்டத்திலிருந்து 8,848.86 மீட்டர் உயரத்தில் உலகின் மிக உயரமான மலையாகும். ஆனால் உண்மையான ராட்சத மலை ஹவாயில் உள்ள மௌனா கியா ஆகும்.
கடல் தளத்திலிருந்து அதன் உச்சி வரை, இது 10,210 மீட்டர் உயரத்தைக் கொண்டுள்ளது,
எவரெஸ்ட் சிகரத்தை சுமார் 1,400 மீட்டர் விஞ்சுகிறது.
மௌனா கியாவின் ஒரு பகுதி மட்டுமே தண்ணீருக்கு மேலே உயர்ந்து, கடல் மட்டத்திலிருந்து 4,207 மீட்டர் உயரத்தை எட்டுகிறது.
எவரெஸ்ட் சிகரம் இன்னும் பூமியின் மிக உயரமான மலையாகும், ஆனால் மௌனா கியா அதன் மொத்த உயரத்தைக் கருத்தில் கொள்ளும்போது உண்மையான ராட்சத மலையாகும்:
பசிபிக் பெருங்கடலில் மறைந்திருக்கும் ஒரு ராட்சத மலை."
அடித்தளத்திலிருந்து உச்சி வரை அளவிடப்பட்டால் மௌனா கியா பூமியின் மிக உயரமான மலை என்பதை உறுதிப்படுத்துகிறது, அதே நேரத்தில் கடல் மட்டத்திலிருந்து எவரெஸ்ட் சாதனையைப் பெற்றுள்ளது.
தோல்வியடைந்த சமூகம் எப்படியிருக்கும்?
ரஷ்ய எழுத்தாளரான ஆண்டன் செக்கோவ் விளக்கம்
https://thaaii.com/2024/08/08/anton-chekhov-telling-about-society/
"தோல்வியடைந்த ஒரு சமூகம் எப்படியிருக்கும்?" என புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளரான ஆண்டன் செக்கோவ்விடம் கேட்டபோது இப்படிக் கூறுகிறார்:
தோல்வியடைந்த சமூகங்களில், ஆரோக்கியமாக சிந்திக்கும் ஒவ்வொருவனுக்கும் எதிராக ஆயிரம் முட்டாள்கள் களத்தில் இருப்பார்கள்.
சிந்தனையோடும் கரிசனையோடும் உதிர்க்கப்படும் ஒவ்வொரு சொல்லுக்கும் எதிராக தீவிரமானதும் முட்டாள்தனமானதுமான ஆயிரம் சொற்கள் உதிர்க்கப்படும்.
அங்கே பெரும்பான்மை முட்டாள்தனத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்கும்.
எந்த சமூகத்தில் அற்பமான விஷயங்கள் பெரும் தலைப்புகளாக மாற்றப்பட்டு, நல்லுணர்ச்சி பெரும் வகையிலான சிந்தனைகளை எல்லாம் மிகைத்ததாக அவை இடம்பிடித்து இருக்கின்றனவோ, எந்த சமூகத்தில் அதன் களத்தை அற்பர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்களோ அதுவே தோல்வியடைந்த சமூகமாகும்."
தாஜுதீன்
ஈரான் மீது ஐரோப்பிய நாடுகள் போட்ட தடையினால் அ*னுஆ*யுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி.
மீண்டும் யுரோனியம் செரிவூட்டளை
8இடத்தில் ரஷ்யாவுடன் இனைந்து ஈரான் செய்ய உள்ளது.
இ*ஸ்ரேல்/ அ*மெரிக்கா அவர்களை தாக்கினால் telaviv மற்றும் haifa மொத்தமாக அழித்த பின்னரே போர் நிறுத்தம் வரும் என்று எச்சரிக்கை செய்துள்ளது ..
முதன் முறையாக ரஷ்யாவுக்கு advanced gas turbine ஈரான் ஏற்றுமதி செய்ய உள்ளது,
Rithusurya Rithu
#தலைப்பு
நின் ஸ்பரிசத் தீண்டல்
..
எத்தனை மெல்லியது
பூவினும் ..
..
எத்தனை வலியது
உடும்பினும்
..
எத்தனை எத்தனை
வார்த்தை ஜாலங்களில்
மையிட்டு மயக்கும்
மாந்தீரகனாய் மாறிப்போவாய்..
..
இக்கணங்கள் சொர்க்கத்தின்
கணங்களென பிரகடனப்படுத்தும்
நம்மிலான கூடல் பொழுதுகள்
..
கூதல் பொழுதில் கிறங்கும்
இணையாக என்னைத் தேடி
அலைவாய்..
அலைய அலைய
அலைய வைப்பேன்
..
ஊடலாகி.. உயிரெடுப்பேன்..
திட்டிக் கொண்டே முட்டிக் கொண்டே
உரசி நிற்பேன்..
இவள் முள்ளா பூவா..
கள்ளா தேனா... எதுநானென
புலம்ப வைப்பேன்..
புலம் பெயர் நீராக..
உன்னையும் வாரி அணைத்துக் கொண்டு
கண்ணுக்கெட்டும் தூரம்
பயணித்து மகிழ்வேன்
மடியும் நிலை வந்தாலும்..
அதுவரை
..
கழுவுகின்ற மீனில் நழுவுகின்ற
மீனாய் நானும் போக்கு காட்டுவேன்
..
முடிவில் சிக்குவதென்பது
தெரிந்த முடிவானாலும்
..
உன்பசிக்கும் ருசிக்கும்
நானெனத் தெரிந்தே
தள்ளிப் போவேன்
..
கிட்ட வா.. என்றழைக்கும் இசைவுகளோடு
தள்ளிப் போ எனும்
அசைவுகளோடு இம்சிப்பேன்..
ப்போடா!
நீ இரட்சிக்கும் மிகைக்காதலோடு
காதலாகி..
என்னைத் தழுவும்
உச்சத் தீண்டிலில்
மிச்சம் கொடுப்பேன்
உச்சம் தொட்டு..
..
நின் ஸ்பரிசப் பூ நான்
தானடா.. இன்பா!!
அரு.இளங்கோவன்லீலாவதி
சென்னிமலை
அரு.இளங்கோவன்
லீலாவதி
தணியாத தாகம் மனதின் ஆழத்தில்,
துளித்துளிக் கனவாய் பொங்கி வழிகிறது.
குழந்தைப் பருவம் விளையாட்டு தாகம்,
விளையாடிக் கொண்டே நாளை மறப்பது.
இளமை பருவம் காதல் தாகம்,
ஒரு பார்வையிலே உயிரை காண்பது.
புத்தக வாசிப்பில் அறிவின் தாகம்,
புதிய பக்கங்களில் உலகைத் தேடுவது.
உறவுகளில் பாசத்தின் தாகம்,
ஒரு சிரிப்பில் நிம்மதி காண்பது.
சமூக நீதி நிலைநாட்டும் தாகம்,
ஒவ்வொரு உயிரும் சமம் என வாழ்வது.
கலை இசை கவிதையின் தாகம்,
இதயத்தைக் கவரும் இசையில் மூழ்குவது.
முதுமையில் கூட நினைவின் தாகம்,
கடந்த நாளை மீண்டும் சுவைக்க விழைவது.
மனிதன் வாழ்வின் எல்லா தருணமும்,
தணியாத தாகம் தான் உயிரின் ஓசை...
என்று தணியும் இந்த
தாகம் ...
கேள்விக் கனவுகளுடன்
அரு.இளங்கோவன்லீலாவதி
சென்னிமலை
18-9-2025
SivakumarSubbarayan
இந்த படத்திற்கு ஒரு நல்ல #தலைப்பு சொல்லிவிட்டு போங்க உறவுகளே..🤔
Sivakumar Sbbarayan
Abdul Kather
Sm Hithayathullah
சென்னை போன்ற நகரங்களில், ஜகாத்தை ( ஏழை வரி) கூட்டாக தங்கள் செய்யதினா பைத்துல்மால் அலுவலகத்தில் செலுத்தி, தம் சமூகத்தில் ஏழைகளே இல்லாத நிலையை ஏற்படுத்திய,
“போரா முஸ்லிமகள்”
வசதியான வாழ்வுடன், பெண்கள் ஆரோக்கியமாகவும், கணவரின் தொழிலில் உதவியாகவும் இருப்பதற்கு மற்றொரு காரணம், கீழ்கண்ட குஜராத் கிராமங்களில் உள்ள ஊர் சமையல் போன்று நகரங்களிலும் (Weekly Menu) செய்கிறார்கள்.
மஸ்ஜிதில் நோன்பு கஞ்சி கூட்டாக செய்யும் நம் முஸ்லிம், மற்றும் சகோதர சமுதாய கிராமங்களும் இதை ஏன் செயல் படுத்மி, வளமாக, தலமாக வாழக்கூடாதா?
இந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும், தனித்தனியாக சமையல் செய்யாமல், பள்ளிவாசல் போல, ஒரு சமூக சமையலறை மண்டபம் (Community Kitchen Hall)-க்கு செல்கிறார்கள்.
மாதத்திற்கு வெறும் ₹2000 செலுத்தினால்,
அந்தக் குடும்பம் முழுவதும் தினமும் சுவையானதும் சத்தானதுமான உணவை சாப்பிட முடிகிறது.
பெண்களுக்கு தினசரி சமையல் சுமை குறையும், குழந்தை கவனிப்பு தொழிலிலும் ஈடுபடலாம்,
எரிவாயு, காய்கறி, மசாலா முதலியவற்றின் செலவுகள் குறையும் எல்லோருக்கும் ஒரே மாதிரியான சத்தான உணவு கிடைக்கும் 🍛
கிராம மக்கள் ஒன்றுபட்டு சமூக ஒற்றுமையுடன் வாழ முடியும் 🤝
இங்கே சமையலறையில் சமைக்கப்படும் உணவு சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
மாதத்திற்கு 2000 ரூபாய் மட்டுமே – அதாவது ஒரு நாளைக்கு சுமார் ₹65 மட்டும் – அதற்குள் குடும்பம் முழுவதும் காலை, மதியம், இரவு உணவை சாப்பிட முடிகிறது!
சமூகமாக ஒன்று சேர்ந்தால் செலவுகள் குறையும்.
ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்
பெண்களின் நேரமும் உழைப்பும் மிச்சமாகும்
குடும்ப பந்தமும், சமூக ஒற்றுமையும் வலுவாகும்.
பகுத்தறிவு சுயமரியாதை
சசிகலாவின் காலை பிடித்து பதவி வாங்கி பின்னர் அவர் காலையே வாரிவிட்ட எடப்பாடிக்கு எங்கள் தலைமையை பற்றி பேச என்ன யோக்கியதை அருகதை தகுதி இருக்கிறது.?
தனிபெரும்பான்மை இருந்தும் பாஜக தயவில் தான் ஆட்சி நடைபெற்றதாக சொல்லி பிச்சை ஆட்சி நடத்திய முதுகெலும்பில்லாத எடப்பாடி தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் விரோதமாக செயல்படும் பாஜகவை கண்டிக்க துப்பில்லாத எடப்பாடியிடம் சுயமாகவும் நாகரிகத்துடன் கூடிய அரசியலை எதிர்பார்க்க முடியாது.
காசாவை நோக்கி கப்பல் பயணம்
பகுத்தறிவு சுயமரியாதை
உலக நாடுகளே உற்று நோக்கும் குளோபஸ் சுமுத் புளோடில்லா வன்முறையற்ற நேரடி நடவடிக்கை
44 நாடுகளை சேர்ந்தவர்கள் மனிதாபிமான பொருட்களுடன் காஸா செல்லும் சர்வதேசிய மனித நேய போராளிகள்
உயிரை பணயம் வைத்து பாலஸ்தீனியர்களுக்கு உதவ வேண்டும் என காஸாவை நோக்கி சென்று கொண்டு இருக்கும் 1000 கப்பலில் 30,000 க்கும் அதிகமான நபர்கள் காஸா நோக்கி பயணமாக செல்கின்றனர் .
உலக வராற்றில் மிக பெரிய கப்பல் பேரணி அணிவகுப்பு சர்வதேசிய பிரபலங்கள் அதில் குறிப்பா காலநிலை ஆர்வலர் கிரடா துன்பர்க் ,ஐரிஷ் லியான் நெல்சன் மண்டேலா பேரன் மற்றும் பிரான்ஸ் எம்பிக்கள் உலகப்புகழ் பெற்ற அரசியல் தலைவர்கள் மருத்துவர்கள் வழக்கறிஞர்கள் பெரும் பத்திரிக்கையாளர்கள் சமூக ஆர்வலர்களின் பெரும் படை Heading Towards to Gaza
மத்திய தரைக் கடல் வழியாக காஸா விர்க்கு இத்தாலியில் தொடங்கி பிரம்மாண்ட Free free palestine என்ற முழக்கத்துடன் பெரும் மக்கள் ஆதரவோடு புறப்பட தொடங்கி சர்வதேச பெருங்கடல் வழியாக காஸா செல்கிறது.
ஓடியனின் பகிர்விலிருந்து!
கணேசன்
பெருங் கானகத்தில் சிட்டுக் குருவியாக இருக்க விருபுகிறேன்.
------------------------------------------------+
மரங்களின் தாய் வாங்கரி மாத்தாய்
நினைவு தினம் .
--------------------------------------------------
உலக புகழ் பெற்ற “பசுமை வெளி இயக்கம்” உருவாக்கிய வாங்கரி மாத்தாய் கென்யாவைச் சேர்ந்த அரசியல்வாதியும் சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஆவார்.
வாங்கரி மாத்தாய் ஆப்பிரிக்கக் கண்டத்தில் கென்யா நாட்டில் நையேரி (Nyeri) என்ற கிராமத்தில் பிறந்தார்.
சுற்றுச்சூழலை பாதுகாப்பதோடு, நாட்டில் நிலவும் பஞ்சம், பசி, பட்டினி, வேலையின்மை ஆகிய பிரச்சனைகளைக்களைய, மண்ணையும் மனித வாழ்வையும் ஒருங்கிணைத்த முயற்சியாக மரம் நடுவதன் மூலம் மண்ணின் வறட்சியையும், மனிதரின் வாழ்க்கை வறட்சியையும் ஒன்றாக களையக்கூடிய ஒரு வழியைக் கண்டுபிடித்தார்.
ஏழை மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலில் 'பசுமை பட்டை' இயக்கத்தை தொடங்கினார்.அதை செயல்படுத்தவும் தொடங்கினார்.
பசுமைப்பட்டை இயக்கத்தின்பால் ஈர்ப்பு கொண்டு தங்களையும் அதில் இணைத்துக் கொள்ள விழைந்தது ஐநா சபை. ஐநா சபை இவர் இயக்கத்திற்கு பண உதவி செய்தது.
அதைக்கொன்டு அரசாங்கத்தின் குறுக்கீடுகளை எதிர்கொன்டு சமாளித்து, பசுமைப்பட்டை இயக்கத்தை விரிவு படுத்தினார்.
ஆப்பிரிக்க நாட்டின் பிற மாநிலங்களுக்கும் பசுமைப்பட்டை இயக்கம் விரிவடையத் துவங்கியது.
இன்று இவர் பெயரால் வனத்துறை சாதனையாளர்களுக்கு வாங்கரி மாத்தாய் விருது வழங்கி கெளரவிக்கப்படுகிறது
நண்பர் ஜெயராமன் பதிவு.
பெரும் கானகத்து சிட்டுக்குருவியாகவே இருக்க விரும்புகிறேன்.
- வங்காரி மத்தாய்
Khalith Shafi
நாங்கள் முன்னேறுவோம்
கண்ணுல " நெருப்போடு"
களத்தில் " வெறியோடு"
எங்கள் "தன்னம்பிக்கை" நம்பி
எங்கள் "லட்சியத்தை" நோக்கி
அடுத்த அடியை எடுத்து
வச்சிக்கிட்டே இருப்போம்
வெற்றி பெரும் வரை......
பாப்பாநாடு
#தற்போதைய செய்தி
சென்னை அருகே #நடைபெற்று வரும் #மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் #பாப்பாநாடு பள்ளிக்கு மேலும் ஒரு பதக்கம்.
14 வயதுக்கு #உட்பட்டோருக்கான மகளிர் ஈட்டி எறிதல் போட்டியில் பாப்பாநாடு #அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி #தர்ணிகா முதலிடம் பிடித்து #சாதனை.
தர்ணிகாவின் ஈட்டி 30.14 மீட்டர்கள் பாய்ந்து வெற்றியை ஈட்டி தந்திருக்கிறது.
#தமிழகம் முழுவதும் #உள்ள விளையாட்டு ஆர்வலர்கள் #தர்ணிகாவையும் உடற்பயிற்சி ஆசிரியர் அருள் #நாராயணன் அவர்களையும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு #வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
CelonVoice
Velmurugan
Celon Voice
Yusuff Siraj
SDPI Tamilnadu
"வக்ஃபை காப்போம், அரசியலமைப்பை காப்போம்!" என்கின்ற முழக்கத்தோடு, வக்ஃப் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆல் இந்தியா முஸ்லிம் பர்சனல் லா போர்ட்டின்(AIMPLB) தமிழக பிரிவு சார்பில் தொடர் போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், நிகழ்வுகளை நடத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்பு மற்றும் அடுத்த கட்ட மக்கள் எழுச்சி போராட்டங்கள், சட்ட ரீதியான நடவடிக்கைகள் சம்பந்தமான விரிவான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் SDPI கட்சியின் சார்பில் மாநில பொதுச் செயலாளர் ஏ.கே.கரீம், மாநில செயற்குழு உறுப்பினர் அஸ்கர் அலி கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினர்.
இந்நிகழ்வில் தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.
இதுதான் பிரபஞ்ச விதி,,,
விபத்தில் பலத்த காயமடைந்த ஒருவர் மிகவும் மோசமான நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவமனையின் உரிமையாளரான மருத்துவர் நோயாளியைப் பார்த்தவுடன், அவர் உடனடியாக ஐசியூவில் அவரை அனுமதிக்கச் சொன்னார்.
2-3 மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மருத்துவர் வெளியே வந்து,
"இவருக்கு இங்கு எந்த விதமான சிரமமோ, அசௌகரியமோ ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்...
மேலும் , அந்த நபரிடம் சிகிச்சை மற்றும் மருந்துகளுக்கு பணம் வாங்க வேண்டாம்" என்றும் தனது ஊழியர்களிடம் கூறி சென்றார்.
நோயாளி சுமார் 15-20 நாட்கள் மருத்துவமனையில் இருந்தார்.
அவர் நன்றாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட இருந்தபோது,
மருத்துவர் (மருத்துவமனையின் உரிமையாளரும்) அவரது இறுதி அறிக்கையை பரிசீலனைக்கு பெற்றார்.
அதனுடன் அந்த நோயாளிக்கு சுமார் 5.50 லட்சம் ரூபாய் ரசீது வழங்கப்பட்டது.
டாக்டர் அவருடைய அக்கவுண்ட் மேனேஜரை அழைத்து, "இவரிடம் ஒரு பைசா கூட வாங்க வேண்டாம். அந்த நோயாளியை என் கேபினுக்கு அழைத்து வாருங்கள்" என்றார்.
நோயாளி சக்கர நாற்காலியில் மருத்துவர் அறைக்கு அழைத்து வரப்பட்டார்.
மருத்துவர் நோயாளியிடம், "தம்பி! என்னை அடையாளம் தெரிகிறதா?"
நோயாளி கூறினார், "நான் உங்களைம எங்கேயோ பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். ஆனால் எங்கே என்று ஞாபகம் இல்லை..."
டாக்டர் சொன்னார், "நாலு வருஷத்துக்கு முன்னாடி, சூரியன் மறையும் சமயத்துல ஊருக்கு அப்பால் அந்த காட்டில் ஒரு காரை சரி பண்ணினீங்க. இப்போது ஞாபகம் வருகிறதா?"
"ஆமா சார், நல்லா ஞாபகம் இருக்கு..."
"அன்றைய தினம் நான் எனது குடும்பத்துடன் சுற்றுலா சென்று கொண்டிருந்த போது, கார் பழுதாகி விட்டது.
சுற்றிலும் வெறிச்சோடிய காடுதான் இருந்தது.
குடும்பத்தில் அனைவரின் முகத்திலும் கவலையும் பயமும் படர்ந்திருந்தது.
நாங்கள் அனைவரும் ஏதாவது உதவி செய்ய கடவுளிடம் பிரார்த்தனை செய்தோம்.
சிறிது நேரத்தில் ஒரு அதிசயம் நடந்தது.
நீங்கள் பைக்கில் வந்தீர்கள்...
பைக்கை நிறுத்திவிட்டு எங்கள் பிரச்சனைக்கு காரணம் கேட்டீர்கள்.
பிறகு காரின் பானட்டைத் திறந்து சரிபார்த்தீர்கள்...
சில நிமிடங்களில் கார் ஓடத் தொடங்கியது.
நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வீடு வந்து சேர்ந்தோம்.
அந்த வனாந்திரக் காட்டில் இரவைக் கழிக்க வேண்டும்' என்ற எண்ணமே எங்களுக்குக் குமுறலை ஏற்படுத்தியதால், எல்லாம் வல்ல இறைவன் உன்னை எங்களிடம் அனுப்பியது போல் உணர்ந்தோம்.
நீங்கள் ஒரு கேரேஜ் நடத்துகிறீர்கள் என்று சொன்னீர்கள்.
அத்தகைய கடினமான சூழ்நிலையில் உங்கள் உதவிக்கு விலை இல்லை, அது விலைமதிப்பற்றது.
ஆனாலும், நான் உங்களிடம்,: "எவ்வளவு பணம் வேண்டும்?" என்று கேட்டேன்.
அந்த நேரத்தில், நீங்கள் கூப்பிய கைகளுடன் பேசிய வார்த்தைகள்,*
எனது விதியும் கொள்கையும் என்னவெனில்...
பிரச்சனையில் இருப்பவரின் உதவிக்காக நான் எதையும் திரும்பப் பெறுவதில்லை.
இந்த வேலையின் கணக்கை என் கடவுள் வைத்திருப்பார்." என்றீர்கள்.
அந்த வார்த்தைகள் என் வாழ்க்கைக்கு உத்வேகம் அளித்தன.
பெயரளவிலான வருமானம் உள்ள ஒருவரால் இவ்வளவு உயர்ந்த எண்ணங்களும், மதிப்புகளும் இருக்க முடியும் என்றால்...,
அவற்றை நாமும் பின்பற்றினால் என்ன?' என்று அன்று நினைத்தேன்.
அன்றிலிருந்து, இன்று வரை அதை கடைபிடித்து வருகிறேன்.
நான்கு வருடங்கள் ஆகியும், எனக்கு எந்தக் குறையும் இல்லை.
உண்மையில், நான் முன்பை விட ஒப்பீட்டளவில் அதிகமாகப் பெறுகிறேன்.
இன்று, இந்த மருத்துவமனை என்னுடையது.
நீங்கள் இங்கே என் விருந்தாளி.
உங்கள் சொந்த விதியின்படி... என்னால் உங்களிடமிருந்து எதையும் வாங்க முடியாது.
இது போன்ற சேவைகள் கடவுளின் அருளாகும்.
"நீங்கள் இப்போது சந்தோஷமாக வீட்டிற்குச் செல்லுங்கள்,
உங்களுக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும், நீங்கள் தயங்காமல் என்னிடம் வரலாம்." மருத்துவர் கூறிவிட்டு கேபினை விட்டு வெளியே சென்றார்.
*அந்த நபர் அறையில் வைக்கப்பட்டிருந்த இறைவனின் படத்தைப் பார்த்ததும், அவன் கைகள் தானாக உயர்ந்து, தானாக இணைந்தன...
அவன் கண்களில் கண்ணீர் பெருகியது.
அவனது இதயம் அளவற்ற ஆனந்தத்தால் நிறைந்தது.
நாம் செய்யும் செயல்கள் நமக்கே திரும்பி வருகின்றன.
அதுவும் ஆர்வத்துடன்.
அனைத்து பாவ, புண்ணிய கணக்குகளும் சரியாக நிர்ணயம் செய்யப்படுகிறது.
இதுதான் பிரபஞ்ச
விதி.
நீதிக்கான ஏக்கம்
Azees Luthfullah
பொய் வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள உமர் காலித், மீரான் ஹைதர், காலித் சைஃபி உள்ளிட்டோருக்கு ஆதரவாக நீதிக்கான ஏக்கம் (longing for Justice) என்கிற பெயரில் தலைநகரம் தில்லியில் மாபெரும் பொதுக் கூட்டம் ஒன்று புதன் அன்று நடந்தது.
பிரஷாந்த் பூஷன், சஞ்சய் ஹெக்டே, கோலின் கோன்சால்வஸ், நிதியா இராமகிருஷ்ணன், வாரிஷா ஃபராசத், ஷாரூக் ஆலம் உள்ளிட்ட புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் பேசினார்கள். நடிகர் பிரகாஷ்ராஜ், ஒய்வு பெற்ற நீதியரசர் இக்பால் அன்சாரி, கண்ணன் கோபிநாத் ஆகியோரும் பங்கேற்றார்கள்.
பொய் வழக்கு உடைந்து நொறுங்குமா? வாய்மை வெல்லுமா? அப்பாவி முஸ்லிம் போராளிகள் விடுதலை செய்யப்படுவார்களா?
விரைவில் எதிர்பார்ப்போம். இன்ஷா
PERIYAKULAM




















































































































































Comments
Post a Comment